இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கடந்த சில நாட்களாக திரையுலகத்தில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அப்படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷைப் பின் தொடர்வதிலிருந்து விலகிவிட்டார். மேலும், அவர்களது யு டியூப் சேனலில் வைத்திருந்த ஜகமே தந்திரம் பட போஸ்டரையும் நீக்கிவிட்டார்.
இதனால், கோபமடைந்த தனுஷ் ரசிகர்கள் நேற்று டுவிட்டர் தளத்தில் தயாரிப்பாளர் சஷிகாந்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்ணன் ஏப்ரல் 2021ல் தியேட்டர்களில் வெளியாகிறது. தேவையான சமயத்தில் உற்சாகமூட்டும் தேவையான ஒரு செய்தி. தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் சினிமா மற்றும் தியேட்டர்களை நம்பி வாழும் அனைவரையும் நினைத்து வெளியிடுவதற்கு, உங்களுக்கு வேறு வழிகள் இருந்தாலும், நன்றி தாணு சார். என்னுடைய ரசிகர்கள் சார்பாக மிகப் பெரும் நன்றி. இது அவர்களுக்கு பல அர்த்தத்தைக் கொடுக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் இந்த அறிக்கை ஜகமே தந்திரம் தயாரிப்பாளரை மறைமுகமாகக் குறிப்பிடுவது போலவும், தன் ரசிகர்களுக்கு ஆதரவு சொல்வது போலவும் உள்ளது.