ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் சித்தி மகனும், ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான நடிகர் விக்ராந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜேசன் சஞ்சய் இயக்குனராகி இருப்பதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் வெளிநாட்டில் படித்து வரும்போதே அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல நிறுவனங்களும், இயக்குனர்களும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க விரும்பவில்லை . இயக்குனராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக தனது தந்தை பெரிய ஸ்டார் நடிகராக இருந்தபோதும் அவர் பெயரை பயன்படுத்தி தான் சினிமாவில் வளர வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. தனது தனித் திறமையால் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அவரது இந்த எண்ணமும் முயற்சியுமே அவருக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் விக்ராந்த்.




