சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

பிற்காலத்தில் சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் துப்பறியும் நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இதுபோல அந்த காலத்தில் துப்பறியும் கிரைம் திரில்லர் நாடகங்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கர், கே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கே.ஆர்.ரங்கராஜூவின் 'மோகன சுந்தரம்' நாவல் அதே பெயரில் திரைப்படமானது. அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் தானே தயாரித்து நடித்தார். அவருடன் எஸ்.வரலட்சுமி, பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், ஜே.பி.சந்திரபாபு, கே.சாய்ராம், வி.கே.கார்த்திகேயன், கொட்டாபுலி ஜெயராமன், வி.சுசீலா, கே.எஸ். அங்கமுத்து, ஜி.சகுந்தலா, சி.வி.வி.பந்துலு, ஜெயக்கொடி கே.நடராஜன், எஸ்.கே.வேணுபாய், எஸ்.ஆர்.லட்சுமி, வி.திருவேங்கடம், கே.எஸ்.ஹரிஹரன் உள்பட பலர் நடித்தனர். ஏடி கிருஷ்ணசாமி இயக்கினார்.
எம்.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட அன்றைய நட்சத்திரங்கள் நடித்தனர். சுமார் 3 மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் திகில் மற்றும் துப்பறியும் கதையாக ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுமக்களை கவரவில்லை. இதனால் சுமாரான வரவேற்பையே பெற்றது.