சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் சிறிய இடைவெளிக்குப் பிறகு தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது ஷாலினி பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் அவர் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து அவர் கூறியதாவது, "அப்போது எனக்கு 22 வயது. நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். கேரவனில் நான் உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது, அந்த படத்தின் இயக்குநர் கேரவன் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்து விட்டார். அதிர்ச்சியடைந்த நான் கத்தி திட்டி, இயக்குநரை அனுப்பிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள், இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றார்கள். அப்போது எனக்கு இந்த பிரச்னையை எப்படி கையாள வேண்டும் எனத் தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இயக்குனரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.