ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஆந்திர மாநிலம் நெல்லூரில் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர் பி.புல்லையா. கல்லூரியில் படிக்கும்போது நாடகத்தில் நடித்த இவர் பாடுவதிலும் திறமையானவர். இன்றைக்கு சுயாதீன ஆல்பங்கள் வெளிவருவது போன்று அன்றைக்கு தானே பாடி அதனை தனி இசை தட்டுகளாக வெளியிட்டவர். மலேசியா சென்று சினிமா கற்ற இவர் பின்னர் மும்பை திரும்பி தாதா சகேப் பால்கே, சாந்தாராம் ஆகியோருடன் பணியாற்றினார்.
பின்னர் அவர் ஹிந்தியில் 'தர்மபத்தினி' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் ஆந்திராவை சேர்ந்த சாந்தகுமாரியை ஹீரோயினாக நடிக்க வைத்தவர். அப்போது சாந்த குமாரி இசை ஆசிரியையாக இருந்தார்.
பின்னர் தெலுங்கு படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தார் பி.புல்லையா. சாந்தகுமாரி தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். தீவிரமாக காதலித்து வந்த இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
மனைவி சாந்தகுமாரியை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் தயாரித்து, இயக்கிய படம் 'பக்த ஜனா'. 1930கள் மற்றும் 1940 களில், பக்தியை கருவாகக் கொண்ட பல படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டன. அவர்கள் ஆண் மற்றும் பெண் புனிதர்களையும், இந்து சமயத்தின் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் பக்தர்களையும் கொண்டாடியது.
துக்காராம், சாந்த சக்குபாய், பக்த சேத்தா, பக்த கௌரி மற்றும் காரைக்கால் அம்மையார் போன்றவை அவற்றில் முக்கிமானவை. அந்த வரிசையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங்க பக்தயை பற்றிய படம் "பக்த ஜனா".
சி.ஹொன்னப்ப பாகவதர், சித்தூர் வி.நாகையா, கே.சாரங்கபாணி, பி.ஆர்.பந்துலு, டி.வி.குமுதினி, டி.என்.மீனாட்சி, கே.ஆர்.செல்லம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு சாந்தகுமாரி, வேலைக்காரி மகள், பொன்னி, பெண்ணின் பெருமை, கலைவாணன், விடிவெள்ளி, போலீஸ்காரன் மகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 1972ம் ஆண்டு வெளிவந்த 'வசந்த மாளிகை' படத்தில் சிவாஜியின் தாயாக நடித்தார்.