என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியான படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படங்களில் முக்கியமான காதல் படமாக அமைந்தது.
மீண்டும் ரீரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்து சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றோடு இப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆன நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான விடிவி கணேஷுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் இயக்குனர் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான், திரிஷா, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
வீடியோவின் முடிவில் சிம்புவின் இதயத்தைத் தொட்டு 'இங்க என்ன சொல்லுது, ஜெஸி ஜெஸி சொல்லுதா' என விடிவி கேட்க, அதற்கு சிம்பு, “இப்பலாம் இங்க ஜெஸி ஜெஸி சொல்லல, வேற சொல்லுது, அப்புறம் சொல்றன் வா,” என பதிலளித்து வீடியோவை முடித்துள்ளார்.
இப்போது யாரையாவது காதலிக்கிறாரா சிம்பு ?.