லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
2022ம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களுக்கான 70வது தேசி திரைப்பட விருதுகளை வென்றவர்களைப் பற்றிய அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' என்ற பாடலுக்காக வென்றனர்.
அதில் நடன இயக்குனர் ஜானி, நடனப் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் காரணமாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய விருதை வாங்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அக்டோபர் 6 முதல் 11ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
70வது தேசிய விருதுகள் டில்லியில் அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது. போக்சோவில் கைதாகி விருதைப் பெறுவதற்காகவே இடைக்கால ஜாமீனில் வர உள்ள ஜானி, தேசிய விருதைப் பெறுவது சரியா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தேசிய விருதுகள் குழு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து பலரும் காத்திருக்கின்றனர்.