Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின்

05 மே, 2024 - 10:52 IST
எழுத்தின் அளவு:
It-is-true-that-Vijay's-son-invited-him-to-act:-Kavin


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோக்களாக மாறியவர்கள் வெகு சிலர் தான். சிவகார்த்திகேயன், சந்தானத்தை தொடர்ந்து தற்போது நடிகர் கவின் அந்த இடத்தை நோக்கி முன்னேறி வருகிறார். கடந்த வருடம் வெளியான டாடா படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் நிறைய தேடி வருகின்றன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டார் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கவின். இந்த படம் வரும் மே பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்சன் தயாரிப்பில் தான் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு செய்தி சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருந்தது. இது பற்றி சமீபத்தில் மனம் திறந்துள்ள கவின், “ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். அவரை நான் நேரில் சென்று சந்தித்தேன். நாம் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக விஜய் அண்ணாவை விட இன்னும் எளிமையாக இருக்கிறார் சஞ்சய். அதேசமயம் நான் சென்றதும், தற்போது நான் பணியாற்றி வரும் படங்கள் மற்றும் அவற்றிற்காக கொடுத்துள்ள கால்ஷீட் குறித்து அவர்களிடம் விளக்கமாக சொல்லிவிட்டு தற்போதைய சூழலில் அவரது படத்தின் நடிக்க முடியாது என்பதை விளக்குவதற்காகவே அங்கே சென்றேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பாபணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ... தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)