நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

லவ் டூடே படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பிறகு பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை முதலில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார்.
இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றார் என ஏற்கனவே வெளியான தகவலைத் தொடர்ந்து இப்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என மூன்று இயக்குனர்களை ஒரே படத்தில் வைத்து விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.