காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக அதிகமாக சினிமாவில் பேசப்படும் விஷயம் நடிகர்-நடிகைகளின் சம்பள விஷயம் தான். இப்போது இது குறித்து கியாரா அத்வானி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, "சம்பளம் விஷயத்தில் ஹீரோக்கள் விட ஹீரோயின்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இது குறித்து நீண்ட வருடங்களாக பேசி வந்தாலும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. நமது திறமையை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிப்பார்கள். ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் நமது திறமைக்கு யார் அதிக மதிப்பு தருகிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போது சம்பள விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது". என தனது கருத்துக்களை முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.