இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. அதே சமயம் மலையாளத்தில் இயக்குனர் சாகிர் மாடத்தில் என்பவர் ஜெயிலில் நடப்பது போன்ற வேறு ஒரு கதை அம்சம் கொண்ட படத்தை உருவாக்கி, அதற்கு ஜெயிலர் என்ற டைட்டிலையும் வைத்திருக்கிறார்.. இந்த படமும் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய படமாக ஜெயிலர் வெளியாவதால் மலையாளத்தில் இந்த சின்ன ஜெயிலர் படத்திற்கு குறைவான எண்ணிக்கையிலே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தே ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டைட்டிலை மலையாளத்தில் மாற்றி வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து புலம்பி வந்தார் இயக்குனர். ஆனாலும் தமிழில் ஜெயிலர் படத்தை தயாரித்த நிறுவனமும் கேரள திரையரங்குகளும் இவரது கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.
அதனால் இறுதி நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்படி எதிர்பார்த்தபடியே மலையாள ஜெயிலர் திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 10ல் ரிலீஸ் ஆவதில் இருந்து பின்வாங்கி மறுதேதி குறிப்பிடப்படாமல் அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




