கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இந்த நிறுவனத்திடம் இருந்து 15 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்திருப்பதாக அவர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடத்தில் அந்த நிறுவனத்தைச் சார்ந்த ரூசோ என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 500 பேர்கள் இடத்தில் சம்மன் அனுப்பி நடத்திய விசாரணையில், அவர்களிடத்தில் இருந்து 800 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆருத்ரா மோசடி விவகாரம் அம்பலத்துக்கு வந்த போது அது சம்பந்தப்பட்ட பலர் தலைமறைவாகிவிட்ட நிலையில், நடிகர் ஆர்.கே .சுரேஷ் கடந்த ஐந்து மாதங்களாக நாடு திரும்பாமல் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.




