சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அடுத்தபடியாக பார்த்திபன் ‛டீன்' என்ற பெயரில் 13 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திற்கு இசையமைக்க அவர் ஏ. ஆர். ரகுமானை தொடர்பு கொண்டபோது, தற்போது வேலைப்பளு அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு உங்கள் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று தெரிவித்தவர், பார்த்திபன் இயக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் அந்த பதிவை தொடர்ந்து தனது டுவிட்டரில் பார்த்திபன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால், ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம். இறுதிவரை வரும் படத்திலும் இருவரும் இணைவோம் என நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவரிடமிருந்து வந்த மிருது மெயில் என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.