லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் பிற மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் அமலாபால் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் அமலாபால்.
அவர் கூறுகையில், ‛‛திருவைராணி கோயிலுக்கு ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. 2023ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக உள்ளது. இந்தநிலை மாறும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மக்களை மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்'' என தெரிவித்துள்ளார்.
‛‛இந்த கோயிலுக்கு ஏராளமானபேர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வருகிறார்கள். அவர்களை பற்றி வெளியே தெரியாததால் பிரச்னை ஏற்படுவது இல்லை. அமலாபால் பிரபலமானவர் என்பதால் அது சர்ச்சையாகி உள்ளது. கோயிலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைப்படியே நடந்துள்ளோம். அதனால் அமலாபாலை அனுமதிக்கவில்லை'' என கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.