‛ஜனநாயகன்' ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட் | மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர | ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு | சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி | திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா | பசில் ஜோசப், அல்லு அர்ஜுன் கூட்டணி உறுதி : ஆனால் அது சக்திமான் கதை அல்ல | விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த பாலிவுட் இசையமைப்பாளர் | நடுவுல நான் எதுக்கு அகர்பத்தி மாதிரி... : சிரஞ்சீவி தமாஷ் | சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் குஞ்சாக்கோ போபன் ஜோடியான ஜெய்பீம் நாயகி. | கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ரசூல் பூக்குட்டி. |

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம், அதையடுத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கினார். இதில் சீமராஜா, எம்ஜிஆர் மகன் படங்கள் தோல்வியடைந்தன. தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொன்ராம் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி முருகன் இரண்டாம் பாகம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கூறியபோது இதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.




