ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

ராதிகா சரத்குமார் நடித்த 'தாய் கிழவி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவக்குமார் முருகேசன். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். முதல் படத்தையே சூப்பர் ஹிட் ஆக்கிய சிவக்குமார் முருகேசனை அடுத்த படத்திற்கும் ஓகே செய்தார் சிவகார்த்திகேயன். அதாவது, தான் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு அவர் தான் இயக்குனர் என தாய் கிழவி படம் வெளிவரும் முன்பே அறிவித்தார்.
அதன்படி, சிவக்குமார் முருகேசன் - சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்கு 'சேயோன்' என தலைப்பிட்டனர். மதுரையை மையமாக கொண்ட கதையில் உருவாகும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நாளை (மே 18) துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மூன்றே மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.