ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் இயக்குனர், ஹீரோ என்று பயணித்து வரும் சுந்தர். சி, விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டு வருகிறார். ஆனால் விஜய் வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் அவரிடத்தில் மொத்த கதையையும் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என்று முடிவெடுப்பார். ஆனால் சுந்தர். சியோ தான் எந்த நடிகரை வைத்து படம் பண்ணினாலும் ஒன்லைன் கதையைதான் சொல்லுவார். காரணம் மொத்த கதையையும் அவரால் கோர்வையாக சொல்ல முடியாது. இதன் காரணமாகவே இதுவரை விஜய்யை வைத்தது தான் படம் இயக்கவில்லை என்று அவரே முன்பு ஒரு மேடையில் சொன்னார்.
இந்த நிலையில் விஜய்யைப் போலவே உதயநிதியை வைத்தும் தான் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டதாகவும், அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் சென்னையில் நடந்த கலகத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் சுந்தர் சி. அது குறித்த அவர் கூறுகையில், இந்த கலகத் தலைவன் படத்தில் நாயகனாக நடித்துள்ள உதயநிதியை வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தை இயக்குவதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் உதயநிதி நடிக்கவில்லை. அதன் காரணமாகவே சித்தார்த் நடித்தார். அந்த படம் அப்போது சூப்பர் ஹிட் ஆனது என்றார் சுந்தர். சி. இன்றைக்கு பல இயக்குனர்களின் படத்தை வாங்கி, அதை நம்பிக்கையோடு வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த மேடையில் பேசினார்.