‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டிரிப்பர் என்டர்டெயின்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்திருக்கும் படம் பரோல். துவாரக் ராஜா இயக்கி உள்ளார். ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்குமார் அமல் இசை அமைத்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் படம் பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறியதாவது: இந்த படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்னையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்த படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர்.
தாய் இறந்த காரணத்தால், தனக்குப் பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும், அவன் அண்ணனுக்கும் இடையிலுள்ள பிரச்னைகளும், அதைச்சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களும்தான் படம். படத்தின் கதை களம் வடசென்னை. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி தணிக்கை குழுவில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் வருகிற 11ம் தேதி வெளிவருகிறது. என்றார்.