இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்திருந்தார். போதை மருந்து வழக்கு நடந்து வந்தாலும் தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராகினி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது அவர் கன்னடத்தில் நடித்து வரும் படம் நானு ஒப்பா பாரதியா. இதனை பாபு கணேஷ் இயக்குகிறார் படத்தில் ராகினி ராணுவ கமாண்டராக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், அதனால் இது எனது மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம். நான் அண்டர்கவர் கமாண்டோவாக நடிக்கிறேன். அந்த உண்மையான தோற்றம் மற்றும் உடல் மொழி இடத்தைப் பெற என் அப்பாவை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன். திரையில் கமாண்டோவாக நடிப்பது கடினமானது, அதனால். நான் கிக் பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று வருகிறேன். மேலும் ஒரு பெண் கமாண்டோவின் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஆக்ஷன் காட்சிகளுக்காக துப்பாக்கி பயிற்சியும் பெற்று வருகிறேன் என்கிறார் ராகினி திவேதி.