விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பக்கங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். சரித்திர கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர் .ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் வெளியாகும் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் குறித்த ஒரு அப்டேட் வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அந்த வீடியோவில், வருகிறான் சோழன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் விரைவில் இப்படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.




