துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அட்டகத்தி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கானா பாலா. ஆடி போனா ஆவணி என்ற ஒரு பாடல் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பிறகு பீட்சா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, சேட்டை என தொடர்ச்சியாக 100 பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடி உள்ளார். ஏராளமான பாடல்களை எழுதியும் உள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கு பாடவோ, நடிக்கவோ பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் தனது வழக்கிறஞர் தொழிலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அவர் வசிக்கும் புளியந்தோப்பு பகுதியின் 72வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த முறை இதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா 4 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.