‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

அட்டகத்தி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கானா பாலா. ஆடி போனா ஆவணி என்ற ஒரு பாடல் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பிறகு பீட்சா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, சேட்டை என தொடர்ச்சியாக 100 பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடி உள்ளார். ஏராளமான பாடல்களை எழுதியும் உள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கு பாடவோ, நடிக்கவோ பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் தனது வழக்கிறஞர் தொழிலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அவர் வசிக்கும் புளியந்தோப்பு பகுதியின் 72வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த முறை இதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா 4 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.




