நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் கடந்த மாதம் 29ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதில் புனித்தின் மரணம் கர்நாடக மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியது.
அவரது நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 17 நாட்களாக ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு புனித் ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல நிறைய மக்கள் பணி செய்தவர். அதனால் தான் அவருக்கு அரசு மரியாதை தரப்பட்டது, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தை அரசு பராமரிக்கும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சி தலைவர் சித்தராமய்யா புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும், என்றார்.