ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா |

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் கடந்த மாதம் 29ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதில் புனித்தின் மரணம் கர்நாடக மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியது.
அவரது நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 17 நாட்களாக ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு புனித் ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல நிறைய மக்கள் பணி செய்தவர். அதனால் தான் அவருக்கு அரசு மரியாதை தரப்பட்டது, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தை அரசு பராமரிக்கும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சி தலைவர் சித்தராமய்யா புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும், என்றார்.