கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி திவேதி இப்போது படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அவர் நடித்து இடையில் நிறுத்தப்பட்ட காந்திகிரி படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. இது தவிர சாரி: கர்மா ரிட்டன் என்ற படத்தில் நடிக்கிறார். இது பெண்ணை கதை களமாக கொண்ட படம். முதன் முறையாக இந்த படத்தில் ராகினி ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். க்ரைம் த்ரில்லர் கதை.
இது தவிர பிரம்மா இயக்கும் ராணா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த பாடல் காட்சி பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. பெங்களூரை அடுத்த ஹேமாகள்ளி கிராமத்தில் பிரமாண்ட கிராம திருவிழாவை நடத்தி இந்த பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தனர். புனித் ராஜ்குமார் மறைவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. அடுத்த வாரம் படப்பிடிப்புகள் நடக்கிறது.