பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி |
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி திவேதி இப்போது படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அவர் நடித்து இடையில் நிறுத்தப்பட்ட காந்திகிரி படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. இது தவிர சாரி: கர்மா ரிட்டன் என்ற படத்தில் நடிக்கிறார். இது பெண்ணை கதை களமாக கொண்ட படம். முதன் முறையாக இந்த படத்தில் ராகினி ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். க்ரைம் த்ரில்லர் கதை.
இது தவிர பிரம்மா இயக்கும் ராணா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த பாடல் காட்சி பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. பெங்களூரை அடுத்த ஹேமாகள்ளி கிராமத்தில் பிரமாண்ட கிராம திருவிழாவை நடத்தி இந்த பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தனர். புனித் ராஜ்குமார் மறைவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. அடுத்த வாரம் படப்பிடிப்புகள் நடக்கிறது.