இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திறமையும், கூடவே அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு நிலையாக நின்று விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் என பலரை கூறலாம். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தனது மூத்த மகன் ரோஷனை, தற்போதைக்கு ஹீரோவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் ரோஷன் தற்சமயம் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சல்மான்கான் நடித்த தபாங்-3 படத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் படித்து வருகிறாராம் ரோஷன். சினிமாவைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன் பின்னர் தனது மகனுக்கு விருப்பமான துறையை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறாராம் ஸ்ரீகாந்த். விஷால், கார்த்தி போன்றவர்கள் உதவி இயக்குனர்களாக பணியாற்றிவிட்டு சினிமாவை பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னரே ஹீரோவாக களத்தில் இறங்கி அதில் சாதித்தும் காட்டினார். அதே பாணியைத்தான் தனது மகனுக்கும் பின்பற்றுகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்




