இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் 'சர்க்காரு வாரி பாட்டா'. இயக்குனர் பரசுராம் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்தது. ஒருபக்கம் கொரோனா பரவல் அதிகரிக்க, இன்னொரு பக்கம் படக்குழுவினரில் சிலரும் மகேஷ்பாபுவின் பெர்சனல் ஒப்பனை கலைஞரும் கூட கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்தப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த, 39 வயதே ஆன குமார் வட்டி என்பவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று மரணத்தை தழுவியுள்ளார். இது மகேஷ்பாபு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் பரசுராமிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய குமார் வட்டி, கடந்த 2017ல் 'மா அப்பாயி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். தற்போது தனது குருநாதர் பரசுராம் இயக்கிவரும் மகேஷ்பாபுவின் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார் குமார் வட்டி