பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

கொரோனா இரண்டாவது அலை பரவுவது தெரிந்தும், பல நடிகர்கள் துணிச்சலாக தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வந்தார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் என சீனியர்களே படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட நிலையில் இளைஞர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.. அப்படி படப்பிடிப்பில் கலந்து கொண்ட மகேஷ்பாபு, ராம்சரண் ஆகியோர் தற்போது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்கள்.
ராம்சரண் தயாரித்து வரும் ஆச்சார்யா படக்குழுவில், சிரஞ்சீவியின் கேரவன் ட்ரைவராக பணியாற்றியவர், கொரோனா தாக்குதலால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ராம்சரண், சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
அதேபோல தற்போது சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வந்தார் மகேஷ்பாபு. இந்தநிலையில் தனது பர்சனல் ஒப்பனைக்கலைஞர் மற்றும் படக்குழுவினர் சிலர் கொரோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, கொரோனா சோதனை மேற்கொண்டு தன்னுடையை குடும்பத்துடன் சேர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் மகேஷ்பாபு.




