'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? | சிவகார்த்திகேயன் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள்: ரவிமோகன் வருத்தம் | பொங்கல் போட்டியில் 'ராட்ட' | கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு கிடைத்த ஆதரவு விஜயின் ஜனநாயகனுக்கு கிடைத்ததா? | கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: தேங்காய் சீனிவாசனிடம் எம்ஜிஆரின் கண்டிப்பும், கருணையும் | பிளாஷ்பேக்: 'பராசக்தி'யை தங்கமாக மின்ன வைத்த மதுரை தியேட்டர் |

மலையாள திரை உலகில் சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். 17 உறுப்பினர்களில் மொத்தம் எட்டு பெண்கள் பொறுப்புகளை பிடித்துள்ளனர். இதுவரை நடிகர் சங்கத்தில் ஆணாதிக்க மனோபாவம் இருந்து வந்தது என்று பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது அப்படியே நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. ஆனாலும் இதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
குறிப்பாக விக்ரம் நடித்த ‛அருள்' படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் கொல்லம் துளசி நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தபோது பெண்களுக்கு அதிகம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டது.
அதற்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த கொல்லம் துளசி, ‛‛பெண்கள் ஆள்வார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆண்கள் ஆள்வார்கள் என்று நாங்கள் சொல்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறியதுடன், “ஆண் தான் ஆள வேண்டும்.. சரியா ? பெண்கள் அவர்களுக்கு கீழே இருக்க வேண்டும்.. இல்லையா ? ஆண்கள் எப்போதுமே பெண்களை விட ஒரு படி மேலே தான் இருக்க வேண்டும்.. இல்லையா ?'' என்று கூறினார். பின்னர் உடனடியாக, ‛‛இப்போது அவர்கள் எங்களுடைய எதிரிகள் ஆகிவிட்டார்கள். இது நான் சும்மா தமாஷுக்காக சொன்னேன்.. ஓகேவா ?'' என்று கூறியுள்ளார்.
மனதில் இருப்பது தானே வெளியே வரும் என்பதற்கேற்ப அவர் கூறிய இந்த கருத்துக்கள் மலையாள திரையரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இவரது கருத்துக்கு பெருமளவில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.