Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆதாரமில்லாமல் எப்ஐஆர் பதிந்தது எப்படி? திலீப் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

01 ஏப், 2022 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Dileep-case-:-Court-questioned

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை நடத்திய அதிகாரிகளை அவர் கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும், கடத்தப்பட்ட நடிகையின் துன்புறுத்தல் சம்பந்தமான வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்ததாகவும் திலீப்பின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக மாறிய இயக்குனர் பாலச்சந்திரன் குமார் என்பவர் போலீசில் தானாகவே வந்து புகார் அளித்தார்.

இதனடிப்படையில் திலீப் மீது மற்றுமொரு வழக்கு பதியப்பட்டு அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வழக்கு உள்நோக்கம் கொண்டது என்றும் சிலரது விருப்பத்திற்காக இந்த வழக்கு தன் மீது போடப்பட்டு உள்ளதாகவும் அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் சிபிஐ வசம் இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் திலீப் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையிடம் ஒரு நபர் வெறும் வாய் வார்த்தைகளால் எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை சந்தேகப்படுவதாக யூகங்களின் அடிப்படையில் புகார் அளித்தால் நீங்கள் அதை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு நடிகர் திலீப் மீது எப்ஐஆர் பதிந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நெருக்கமாக இருந்த ஒரு நபர் போலீஸ் அதிகாரிகள் மீது இப்படி ஒரு கொலை சதி நடத்த நடிகர் திலீப் திட்டமிட்டு இருந்ததாக கூறியதைத் தொடர்ந்து அதன் பின்னணியில் என்ன நடந்திருக்கிறது என்பதை விசாரணை செய்வதற்காகவே இந்த எப்ஐஆர் பதியப்பட்டது என்று பதில் கூறினர்.

இந்த பதிவில் திருப்தி அடையாத நீதிபதி இப்போது இவர் மீது வழக்குப் பதிந்து உள்ள நீங்கள் 2017ல் அவர் சதித்திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட பின்னர் அதற்கான அறிகுறிகள் ஏதாவது நடைபெற்றதா என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கு : காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த முடிவுபிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கு : ... காளியனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பிருத்திவிராஜ் காளியனுக்கு மீண்டும் உயிர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in