மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கொரோனா தொற்றால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. அதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தது. இதை தொடர்நது அங்குள்ள தியேட்டர்கள் மூடப்பட்டது. 3வது அலையின் போது தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ( மார்ச் 1)முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. சினிமா அமைப்புகள் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.