சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் குருப். எண்பதுகளில் கேரளாவில் பிரசித்தி பெற்ற குற்றவாளியான சுகுமார குருப் என்பவனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக சாக்கோ என்கிற இன்னொரு இளைஞரை கொன்று, தான் இறந்து விட்டது போன்று சித்தரித்து தப்பிச் சென்றுவிட்டான் குருப். தற்போதும் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் தான் குருப் இருக்கிறான். படத்திலும் அதையே தான் காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் கேரள முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் ஜேக்கப் என்பவர் குருப் குறித்து ஒரு ஆச்சரிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது சாக்கோ கொலையான அந்த சமயத்திலேயே குருப் மீது சந்தேகம் வந்து போலீசார் அவரை பிடித்து விட்டனராம். ஆனால் அதற்குள் குருப் தன்னுடைய தாடியை எடுத்துவிட்டு புதிதாக மச்சம் ஒன்றை ஒட்டிக்கொண்டு ஆளே மாறி காட்சியளித்துள்ளான். அவனிடமிருந்து கைரேகை பதிவும் எடுக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்த ரிசல்ட் வருவதற்கு சில தினங்கள் ஆகும் என்பதால் குருப் உள்ளிட்ட ஒருசில சந்தேகப்பட்ட நபர்களை போலீசார் அனுப்பி வைத்துவிட்டனர். ஆனால் குருப்பின் கைரேகை தான் என்பது தெரியவரும்போது குருப் கேரளாவை விட்டு எஸ்கேப் ஆகி இருந்தான். அதன் பிறகு அவன் போலீசாரிடம் சிக்கவேயில்லை என்று கூறியுள்ளார் அந்த டிஜிபி.