சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் குருப். எண்பதுகளில் கேரளாவில் பிரசித்தி பெற்ற குற்றவாளியான சுகுமார குருப் என்பவனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக சாக்கோ என்கிற இன்னொரு இளைஞரை கொன்று, தான் இறந்து விட்டது போன்று சித்தரித்து தப்பிச் சென்றுவிட்டான் குருப். தற்போதும் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் தான் குருப் இருக்கிறான். படத்திலும் அதையே தான் காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் கேரள முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் ஜேக்கப் என்பவர் குருப் குறித்து ஒரு ஆச்சரிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது சாக்கோ கொலையான அந்த சமயத்திலேயே குருப் மீது சந்தேகம் வந்து போலீசார் அவரை பிடித்து விட்டனராம். ஆனால் அதற்குள் குருப் தன்னுடைய தாடியை எடுத்துவிட்டு புதிதாக மச்சம் ஒன்றை ஒட்டிக்கொண்டு ஆளே மாறி காட்சியளித்துள்ளான். அவனிடமிருந்து கைரேகை பதிவும் எடுக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்த ரிசல்ட் வருவதற்கு சில தினங்கள் ஆகும் என்பதால் குருப் உள்ளிட்ட ஒருசில சந்தேகப்பட்ட நபர்களை போலீசார் அனுப்பி வைத்துவிட்டனர். ஆனால் குருப்பின் கைரேகை தான் என்பது தெரியவரும்போது குருப் கேரளாவை விட்டு எஸ்கேப் ஆகி இருந்தான். அதன் பிறகு அவன் போலீசாரிடம் சிக்கவேயில்லை என்று கூறியுள்ளார் அந்த டிஜிபி.