Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர்

18 மே, 2026 - 06:11 IST
எழுத்தின் அளவு:
20-crore-loan-not-received..-no-one-picks-up-the-phone..-K.-Rajans-family-about-him
Advertisement


சென்னை அடையாறு ஆற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பார் கே.ராஜன் உடல் இன்று சென்னை தண்டையார்பேட்டை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை காசிமேடு மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அவர் மரணம் குறித்து பல்வேறு தகவல் பரவி வரும் நிலையில், கே.ராஜனின் மகன், மகள் அளித்த பேட்டியில், ''அப்பா கே.ராஜன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் விதவை தாயால் வளர்க்கப்பட்டவர். தன்னையே செதுக்கிக் கொண்டவர்.. சினிமா எனும் சமுத்திரத்தில் தைரியமாக கால் எடுத்துவைத்தவர்.

திருட்டு விசிடி ஒழிக்க தைரியமாக இருந்து வழக்கை சந்தித்தவர். ஹேராம் படத்துக்கு தைரியமாக போராடியவர், ஆனால் கமல் கடைசி வரை நன்றி சொல்லவில்லை. திரையுலகினர் கடைசியாக அவரை வந்து பார்த்து நன்றி சொல்ல வேண்டும். அவரை பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம். அவர் கடனாளி அல்ல. அவர்தான் கடன் கொடுத்தார். அவர் கொடுத்த பணத்தில் 20 கோடி வரை இன்னும் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் யூடியூப்பில் பேச பணம் வாங்குவார். அதை கூட படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தார்.

கடன் வராததால் இரண்டு வருடமாக மன உளைச்சலில் இருந்தார். கடன் கொடுத்தவர்கள் போன் கூட எடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு பணம் கொடுத்திருந்தார். வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போதுதான் பேஸ்மேக்கர் வைத்துவிட்டு வந்தார். இனியாவது மனம் திருந்தி பணம் தருவார்களா என்று பார்க்கலாம். பணம் வாங்கியவர்கள் பற்றி அப்பா எங்களிடம் சொல்லியுள்ளார். தயாரிப்பாளர் சங்க, விநியோகஸ்தர் சங்கத்திடம் கடன் பற்றி கூறியிருக்கிறோம். மனம் திருந்தி அவர்கள் பணம் திருப்பி தர வேண்டும். ராஜனுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை அது.'' என்றார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்!ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' ... தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap