டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'சக்திமான்', 'தியா அவுர் பாதி ஹம்' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் நூபுர் அலங்கார். பல பாலிவுட் திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் இவர் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பிஎம்சி வங்கி மோசடியில் பணம் முழுவதையும் இழந்தார்.
பிறகு ஆதரவாக இருந்த தாய், சகோதரி இறந்த விட்டதால் அவருக்கு வாழ்க்கை மீது அதீத வெறுப்பு ஏற்பட்டது. இதனால் தனது நடிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை துறந்து சாமியாராகிவிட்டார்.
தற்போது 'பீதாம்பரா மா' என்ற ஆன்மிக பெயருடன் இமயமலையில் வசித்து வருகிறார். அங்கு மிகவும் குறைந்த உடைகளுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். பிச்சை எடுத்து சாப்பிட்டு குகைகளிலும், தொலைதூர கிராம பகுதிகளிலும் வசித்து வருகிறார்.
"உலக வாழ்க்கையின் அழுத்தங்கள், செலவினங்கள் போன்ற கவலைகளின்றி நான் மிகவும் நிம்மதியாக வாழ்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.