Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்

19 ஜன, 2023 - 03:25 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rai-Bachchan-faces-legal-notice-over-non-payment-of-land-tax-for-property-in-Nashik

1997ம் ஆண்டு தமிழிலில் முதல்முறையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமடைந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக நில வரி செலுத்தாததை தொடர்ந்து, நாசிக் மாவட்ட வருவாய்த்துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் நில வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அப்பகுதியில் நில வரி செலுத்தாத 200க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்சேதுபதி பிறந்தநாளில் நிறைவுற்ற மெர்ரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்புவிஜய்சேதுபதி பிறந்தநாளில் ... டாம் குரூஸ், ஜாக்கிசானை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்! டாம் குரூஸ், ஜாக்கிசானை பின்னுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)