டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்நாட்டின் தங்க தாரகையே..தங்கமுலாம் பூசிய நிலவே..கண்ணில் இட்ட அஞ்சனத்தால் ஆண்களை கிறங்க வைத்தவளே.. பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய காவியமே..சேலை கட்டிய சோலையே... என சின்னத்திரை ரசிகர்களை வர்ணிக்க துாண்டி,'மிரள்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் மிரட்டிய நடிகை காவ்யாவிடம் கொஞ்சம் பேசலாம்...
நீங்கள் என்ன படிச்சிருக்கீங்க
என் பள்ளி படிப்பு எல்லாம் திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தான். ஆர்கிடெக்ட் படிப்பிற்காக சென்னை வந்தேன். தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போ 5 வருஷமா நடிப்பில் இருக்கேன்.
சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது
குறும்படங்களில் நடித்தேன். அதை தொடர்ந்து 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்தேன். பிறகு 'பாண்டியன் ஸ்டேர்ஸ்' தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தேன்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக காரணம்
நான் எதிர்பார்த்துகொண்டிருந்தது வெள்ளித் திரை. நினைத்தபடி வாய்ப்பு கிடைத்தது. இனி சினிமாவில் மட்டும் நடிக்கலாம் என விலகி விட்டேன்.
நடித்தில் பிடித்த கதாபாத்திரம்
காவ்யாவான என்னை 'அறிவுமணி'தான் இந்த உலகிற்கு தெரிய வைத்தது.
மிரள் பட வாய்ப்பு எப்படி
எப்படி என தெரியவில்லை. இப்போதும் மிரட்சியாக இருக்கிறது.
ஏதேனும் சினிமா வாய்ப்புகளை தவற விட்டீங்களா
சீரியலில் நடிக்கும் போது 'பிகில்' பட வாய்ப்பு வந்தது. அப்போது வேறொரு சீரியலில் ஒப்பந்தம் ஆனதால் அதில் நடிக்க முடியவில்லை.
எந்த ஹீரோவோடு நடிக்க ஆசை
விஜயுடன் நடிக்க ஆசை. அதே போல விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா கூடவும் நடிக்க வேண்டும்.
உங்களுடைய பொழுதுபோக்கு
பெயின்ட்டிங், இன்டீரியர் டிசைன் செய்வேன்.