விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் | நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு |
பாக்கியலெட்சுமி சீரியலிலிருந்து வெளியேறிதற்கான காரணத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்த ஜெனிபர். தற்போது மற்றொரு முக்கிய காரணத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகும் பாக்கியலெட்சுமி என்ற சீரியலில், ராதிகா எனும் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார் . இந்த கதாபாத்திற்காக ஜெனிபருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இந்நிலையில் ஜெனிபர் திடீரென விலகியது அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெனிபர், ராதிகா கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் நெகடிவ் கேரக்டராக மாற இருக்கிறது. எனவே, அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என தெரிவத்திருந்தார். மேலும், தற்போது வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் சீரியலிலிருந்து விலகியதற்கான முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். தனது குடும்பத்தில் வரவிருக்கும் மற்றொரு உறுப்பினரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால் சீரியலில் நடிக்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் ஜெனிபருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.