சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தமன்னா, ஜி.எம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள் தாஸ், நந்தினி உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வெப் சீரிஸ் நவம்பர் ஸ்டோரி. இந்திரா சுப்ரமணியன் இயக்கி உள்ளார். 7 எபிசோட்களாக உருவாகி இந்த வெச் சீரிசுக்கு விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் ராகவன் இசை அமைத்துள்ளார்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இந்த வெப் சீரிஸ் விஜய் தொலைக்காட்சியில் நாளை (வெள்ளி) இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. தமிழில் ஒரு வெப் சீரிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது இதுவே முதல் முறை.
தமன்னாவின் அப்பா பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர். அவருக்கு அல்ஸைமரால் என்ற ஞாபக மறதி நோய் இருக்கிறது. அவர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி தன் பூர்வீக வீட்டுக்கு செல்வார். அப்பாவின் சிகிச்சைக்காக அந்த பூர்வீக வீட்டை விற்க தமன்னா முயற்சிக்கிறார், இந்த நிலையில் அப்பா செல்லும் நவம்பர் 16ந் தேதி அந்த வீட்டில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். கொலை செய்தது தமன்னாவின் அப்பாவா? வேறு யாராவதா? என்பதை தமன்னா கண்டுபிடிப்பதுதான் கதை.