மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி |
ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே உனக்காக. அருண், ராதிகா ப்ரீத்தி, ஸ்ரீனிஷ் அரவிந்த், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நாயகனாக அருண் நடித்து வந்தார். தற்போது சீரியலில் இருந்து விலகி விட்டதாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பூவே உனக்காக தொடரிலிருந்து நான் விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி என்னை நீங்கள் கதிர் கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது. இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவின்றி நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது.
எனக்குத் தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வரும் எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இதே தொடரில் நாயகியாக நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிகா விலகினார். அவர் விலகலுக்கான காரணத்தை நேரம் வரும்போது வெளிப்படையாக சொல்வேன் என்ற லிவிங்ஸ்டன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.