ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மியூசிக் சேனல் ஒன்றில் 'கட்டம் என்ன சொல்லுது' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் அனன்யா. அதன்பின் கலர்ஸ் தமிழ் சேனலில் வந்தாள் மஹாலட்சுமியே என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் பலரும் அறிந்த பிரபலமாக உருவெடுத்தார். இவரது சிரித்த முகத்திற்கும் கலகலப்பான பேச்சுக்கும் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சீரியல் முடிந்து விட்ட நிலையில் பலரும் அனன்யாவின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டினை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அனன்யாவோ தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன் என டாட்டா காட்டிவிட்டார்.
அனன்யா, தமிழ் என்பவரை காதலித்து வருகிறார். தமிழ் ஆஸ்திரேலியாவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். லவ் கம் அரேன்ஜ் மேரேஜாக மாப்பிள்ளையின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சியில், அனன்யா-தமிழ் திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது. கல்யாணத்தை சிம்பிளாக ப்ளான் செய்ததால் அனன்யா தனது மீடியா நண்பர்களை அழைக்கவில்லையாம். ஆனால், அவரது திருமண புகைப்படங்களும், மாலை மாற்றும் விளையாட்டும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின் அனன்யா ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் இனி அவர் பிறகு நடிக்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.