படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக திரைபிரபலமான பவானி ரெட்டி பார்க்கப்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்க நாள் அன்றும், 'கதை சொல்லட்டுமா' டாஸ்கின் போதும் ரசிகர்களை தனது சோக கதையால் கண்ணீர் சிந்த வைத்தார் பவானி. காரணம் பவானி ரெட்டி காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரது கணவர், திருமணமான எட்டே மாதங்களில் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதற்கு பவானி ரெட்டியின் தவறான நடத்தையே காரணம் என இன்றளவும் வதந்திகள் பரவி வருகிறது.
இதை மறுத்து பேசிய பவானி கணவனின் இறப்பு குறித்தும், அவரை பிரிந்து தான் வாடுவதும் குறித்தும் உருக்கமாக பதிவு செய்தார். இருந்தாலும் இணையத்தில் நெட்டிசன்கள் மீண்டும் வதந்திகளை கிளப்பி வந்தனர். மேலும் பவானிக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது எனவும் சில புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேண்டில் செய்து வரும் அவரது சகோதரி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்த பதிவில், 'பவானியும் அவரது கணவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். எதிர்பாராதவிதமாக பவானி கணவரை இழந்து விட்டார். தனது கணவரின் நினைவால் தற்போது தவித்து வருகிறார். சில காலங்களுக்கு முன் வேறு ஒருவரை விரும்பினார். அவருடன் சேர்த்து வைக்க ஆசைப்பட்டோம். ஆனால், அவருடன் பவானிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரஸ்பரத்துடன் பிரிந்து விட்டனர்' என மிக தெளிவாக அந்த பதிவில் கூறியுள்ளார்.