கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
பரசுராம் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'பேமிலி ஸ்டார்' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, படம் குறித்து பல நெகட்டிவ்வான கருத்துக்களை வேண்டுமென்றே சிலர் பதிவிடுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் மேனேஜர் அனுராக் பர்வதனேனி, விஜய் தேவரகொண்டா ரசிகர் மன்றத் தலைவர் நிஷாந்த்குமார் இது குறித்து புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சில குரூப்கள், சில கணக்குகள் ஆகியவற்றின் ஸ்கிரீன் ஷாட் உடன் அந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜுவும் கருத்து தெரிவித்துள்ளார். “சில நெகட்டிவ்வான விமர்சனங்களால்தான் ஒரு தரப்பு ரசிகர்கள் படத்திற்கு வரவில்லை. அந்த நெகட்டிவ் விமர்சனங்கள், அந்த முட்டாள்தனமான விமர்சனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேரளாவில் படம் வெளியான மூன்று நாட்கள் வரை விமர்சனங்கள் போடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது போல இங்கும் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் திரையுலகம் வாழ முடியாது,” எனக் கூறியுள்ளார்.
தில் ராஜுவின் இந்தக் கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.