'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா |
நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்து நடித்த படம் வாரிசு. கடந்த பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியான இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். பட ரிலீஸுக்கு முன்பாக இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தில் ராஜு விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்பது போல பேசி ஒரு பரபரப்பையும் சர்ச்சையையும் தமிழ் திரையுலகில் ஏற்படுத்தினார்.
அதேபோல இந்த படத்தில் சாங்ஸ் இருக்கு, டான்ஸ் இருக்கு, பைட் இருக்கு என அவர் அந்த நிகழ்வில் பேசிய வார்த்தைகளும் பேசிய விதமும் அப்போது வைரலாக பரவின. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள பாலகம் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தில் ராஜு அதேபாணியில் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “இந்த சினிமாவில் பைட் இல்லை.. இந்த சினிமாவில் டான்ஸ் இல்லை இந்த சினிமாவில் அந்த விஜய் சாரின் பாடி லாங்குவேஜ் இல்லை. ஆனால் இந்த சினிமாவில் சூப்பரான பொழுதுபோக்கு இருக்கு.. சூப்பர் எமோஷன் இருக்கு.. சூப்பர் தெலுங்கானா நேட்டிவிட்டி இருக்கு” என்று பேசியுள்ளார்.
குறிப்பாக வாரிசு படத்தில் விஜய்யின் பாடி லாங்குவேஜ் குறித்து அவர் பேசியதை பார்க்கும்போது, அவர் விஜய்யை கிண்டலடித்து கூறியுள்ளார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. வாரிசு படம் தில் ராஜுவுக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்பதாலும் மீண்டும் தெலுங்கு ஹீரோக்களின் மனதில் இடம் பிடிக்கவேண்டும் என்பதாலும் தில் ராஜு இப்படி பேசியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு படத்திற்கு முன்பு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்பது போன்று அவர் பேசியபோது அவரை புகழ்ந்து தள்ளிய விஜய் ரசிகர்கள் தற்போது தில் ராஜுவின் இந்த பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.