உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தினால் ஏற்பட்ட பஞ்சாயத்தினால் சில வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, இப்போதுதான் சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய்சேகர் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. இப்போது அந்த கேரக்டரையே ஒரு முழு நீள படமாக எடுக்க உள்ளனர். அதனால் இந்த படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைக்க எண்ணினர். ஆனால் இதே தலைப்பில் நடிகர் சதீஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் நாய் சேகர் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. இதையடுத்து வடிவேலு நடிக்கும் படத்திற்கு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்று தலைப்பு வைக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நாய்சேகர் தலைப்பு குறித்து ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறுகையில், நாய் சேகர் என்பது வடிவேலு சாருக்குரிய தலைப்பு தான். என்றாலும் அந்த தலைப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கதையில் சதீஷ் நடித்து முடித்து விட்டார். அந்த கதைக்கு அந்த தலைப்பு சரியாக இருக்கும் என்பதால் அவர்கள் தங்களது பிரச்சினையை சொல்லிவிட்டார்கள். நான் கூட இது சம்பந்தமாக சதீஷிடம் பேசினேன்.
மேலும், சதீஷ் முதன்முதலாக கதாநாயகனாக நடிக் கும் படம் என்பதால் அவருக்கு இதுபோன்று ஏற்கனவே ரீச்சான தலைப்பு தேவைப்படுகிறது. ஆனால் வடிவேலு சாரைப் பொறுத்தவரை அவர் எந்த தலைப்பில் நடித்தாலும் ரீச்சாகி விடும். அப்படியொரு பிரமாதமான நடிகர். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும். என்னைப் போன்ற நடிகர்களின் படங்களிலும் காமெடி செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.