பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படம் சின்னத்திரையிலும், ஓடிடியிலும் வெளியாவதாக வந்த தகவலை தொடர்ந்து மேலும் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் டாப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலை முடிந்திருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு விட்டது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
படத்தில் டாப்ஸி நடித்திருப்பதால் படத்தை இந்தியில் வெளியிடவும் ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.