இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு | கரகாட்டக்காரன் 2 வருமா - ராமராஜன் பதில் | எலெக்ஷனால் தள்ளிப்போகும் 'எமெர்ஜென்சி' | 'மெட்டிஒலி' சாந்திக்கு நிஜத்திலும் மருமகளாகும் சந்தியா | பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மாவீரன். இந்த படம் 50 கோடி வசூலை தாண்டி உள்ளது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அந்த குரலுக்கு விஜய் சேதுபதி தான் குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛எனக்கும், விஜய்சேதுபதிக்கும் எந்த போட்டியும் இல்லை. அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். அது விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. மாவீரன் படத்தில் அவர் கொடுத்த குரலுக்கு ஒரு பைசா கூட விஜய் சேதுபதி சம்பளம் பெறவில்லை என்று கூறினார்.
அதையடுத்து அவர்கள் இணையும் படம், மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படமாக கூட இருக்குமோ என்கிற யூகங்கள் எழுந்துள்ளன.