போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடிதான்', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், குழந்தையை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். அதற்கு ‛‛குழந்தை பெற்றுக் கொள்வது உங்களின் பார்ட்னர் மற்றும் உங்களுடைய முடிவுகளை பொறுத்தது'' என்று பதில் அளித்தார் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்க அவரும் அப்படியே செய்தார். அதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் செல்பியை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அந்த படம் வைரலாகி வருகிறது.