விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
உலக அளவில் பல நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செப்'. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரான்க் ரோட்டம் என்பவரது எண்ணத்தில் உருவான நிகழ்ச்சி இது. 1990ம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி, பின்னர் 2005ம் ஆண்டு சில மாற்றங்களுடன் பிபிசி டிவியில் ஒளிபரப்பானது.
தற்போது உலகம் முழுவதும் 40 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழில் ஒரு முன்னணி டிவியில் விரைவில் இந்த நிகழ்ச்சி தனது ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே இதே டிவியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது போல 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சிக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.