இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. அவருடைய அடுத்த படம் பற்றிய விவாதத்தில் தற்போது இருந்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் சமூக வலைத்தளங்களுக்கு வந்துவிட்டார்கள். இருந்தாலும் சிலர் இன்னும் அந்தப் பக்கமே வராமல் இருக்கிறார்கள்.
தற்போது புதிய வரவாக இயக்குனர் பாலா டுவிட்டர் பக்கம் வந்திருக்கிறார். அவருடைய முதல் டுவீட்டாக முதல்வரைப் பாராட்டி கடிதம் எழுதி அதன் மூலம் டுவிட்டரில் தன் முதல் பதிவை இட்டிருக்கிறார்.
“தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிப்பதைத் தவிருங்கள்,' என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம், நன்றிகள்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்,
கோனோக்கி வாழுங் குடி,” என்ற குறளுடன் தன் பாராட்டு மடலைப் பதிவிட்டிருக்கிறார்.