விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தவர், 2017ம் ஆண்டு முஸ்தபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரியாமணி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் 'கொட்டேஷன் கேங்க்' படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார்.
மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளதால், சமூகவலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் பிரியாமணி. சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வரும் அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இதனால் கலவையான விமர்சனங்களையும், கேள்விகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், 'தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா?' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரியாமணி, 'என் கணவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன்' என நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு ரசிகர், 'உங்களது நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள்' என பிரியாமணியிடம் ஆபாசமாகக் கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த பிரியாமணி, 'முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அவர்களது புகைப்படத்தை பதிவிட்டால், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன்' என பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியாமணியின் இந்தப் பதிலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.