புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா | தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்கு : கங்கனா அறிவிப்பு | 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ? | 'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் |
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கி அதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் பாலிவுட்டிலும் ஆயிரம் கோடி வசூல் செய்த வெற்றி படமாக ஜவானை மாற்றினார் அட்லீ. மேலும் இந்த படத்தின் மூலம் அனிருத், விஜய்சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு ஆகியோரையும் தன்னுடன் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார் அட்லீ.
இதில் படத்தின் கதாநாயகி நயன்தாராவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரியாமணியை எப்போதுமே அட்லீ, புலி அல்லது புலி மணி என்று தான் அழைப்பாராம். படத்தின் கதையை அட்லீ சொன்ன அந்த முதல்நாளில் இருந்து ஜாலியாக பழக ஆரம்பித்ததுடன் படப்பிடிப்பு நாட்களில் எப்போதுமே இந்த பெயரை தான் கூறி தான் பிரியாமணியை அழைப்பாராம் அட்லீ. மீண்டும் அட்லீயுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்வி சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் பிரியாமணி.