ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில், பிரபல மலையாள நடிகரான மம்முட்டி, வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் தளபதி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். நட்பின் அருமையைப் பேசும் அந்தப் படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தார்கள்.
அதை வைத்து தளபதி பட பாணியில் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” எனப் பதிவிட்டுள்ளார்.